Saturday, 27 April 2019

அக்‌ஷர்தாம் கோவில்~டெல்லி


           மாலை ஐந்து மணிக்கெல்லாம் டெல்லி சென்றுவிட்டேன்.முதல் விசிட் அக்‌ஷர்தாம் கோவிலுக்கு தான்.இது டெல்லி விமான நிலையத்திலிருந்து 23கிமீ தொலைவில் உள்ளது.டெல்லி ட்ராஃபிக்குக்கு இது கொஞ்சம் நெடுகால பயணம் தான்‌. அதனால் கோவிலுக்கு மெட்ரோவில் செல்வதாக எடுத்தது தரமான தீர்மானம்.NH24ல் அமைந்திருந்த அக்‌ஷர்தாம் மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து கோவில் அதிகம் தூரமில்லை இந்தியாவின் ஆன்மீக குருவான பகவான் சுவாமி நாராயண் நினைவாக எழுப்பப்பட்டதும் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவிலாம் இந்த ஸ்தலம்.அதன்படி கின்னஸ் புத்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறது மற்ற இந்து கோவில்களில் இல்லாத பல பலத்த பாதுகாப்பு வழிமுறைகள் இங்கே பின்பற்றப்படுகின்றன.மொபைல், கேமரா, லக்கேஜ் பேக், வெளி உணவுகள் மற்றும் குடை உட்பட எவற்றையும் இவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை.
       
            நானும் எனது trecking தோழி சோனமும் (இவர் மும்பையில் ஒரு NGO ல் பணிபுரிகிறார் ) உடமைகள் அனைத்தையும் க்ளாக் ரூமில் ஒப்படைத்து மற்ற சோதனைகள் முடிந்து உள்ளே செல்ல அதற்குள் ஒரு மணிநேரம் கழிந்திருந்தன.உள்ளே சென்றதும்வயதானவர்கள் ஓய்வெடுக்க, களைப்பானவர்கள் இளைப்பாற ஏதுவான மிகப்பெரிய வரவேற்பறை. கோவிலின் அழகியல், விபரங்கள் விவரிக்கும் guide bookம் அங்கேயே காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது‌.Water showக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்றதில் 20நிமிடம் ஓடிப்போனது.காட்சி நேரத்திற்கு மேலும் 3/4 மணிநேரம் இருந்ததால் கோவிலை சுற்றி பார்க்க நிறைய அவகாசமும் கிடைத்தது.
           
            இந்த கோவில் இந்துகட்டிடக்கலையையும் பன்பாட்டையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்தும் விதமான நிறைய சிற்பங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.மய்யக்கோவிலில் 11அடி உயர சுவாமி நாராயண் சிற்பத்துடன் சிவபார்வதி, ராதாகிருஷ்ணன், சீதாராமன், லஷ்மி நாராயண் சிற்பங்களும் கோவிலை அலங்கரிக்கின்றன..வளாகத்தின் மய்யக்கோவிலானது முழுவதும் கற்களால் செதுக்கப்பட்டதாகவும், மய்யக்கோவிலை சுற்றியுள்ள விரிவுப்படுத்தப்பட்ட இன்ன சிற்பங்களும் சுவர்களும் மாடங்களும் எஃகு அல்லது காரை பயன்படுத்தாமல் ராஜஸ்தான் சிவப்பு மண்பாறை மற்றும் இத்தாலிய கற்கலவைகளால் எழுப்பப்பட்டு இருக்கிறது.இவற்றை ரசித்திருக்கும்போதே water showவுக்கான announcement ஒலிக்க show place நோக்கி நகர்ந்தோம்.குறும்புக்கார குழந்தைகள் சிலர் ஒரு ஏரிக்கரையை சுற்றி மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து ஏரியில் மலர்ந்திருக்கும் பூக்களும் நடனமாடி மகிழ்கின்றன.குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும் அவர்களின் துன்புறுத்த வரும் சக்திகளுக்கும் நடக்கும் சண்டையில் இறுதியில் அன்பே வெல்கிறது.இப்படியான திரைக்கதை multi colour laser, video projection, underwater flames, waterjets மற்றும் surrounding sounds in symphony with lights என தொழில்நுட்பங்களின் உதவியுடன் காண்பதற்கு அழகான ஒலியொளி நிகழ்வாக நடந்தேறுகிறது.25 நிமிட இந்த ஒலியொளிக்காட்சி அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டிய ஒரு festival celebration Experience.Water show முடிந்தும் கூட கோவிலை சுற்றி ரசிக்க சில அவகாசம் கிடைத்தது.கோவிலின் மொத்த அமைப்பும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணம்,இந்திய வரலாறு,  ஸ்தல வரலாறு, சுவாமி நாராயணன் வாழ்க்கை வரலாறு கொண்ட புகைப்பட, ஓவிய மற்றும் பொருட்காட்சிகளும்,South Indian, north Indian, Chinese, Italian உணவு வகைகளை கொண்ட food courtம்,குழந்தைகளை கவரும் வண்ணம் மிகப்பெரிய தோட்ட அமைப்புமென பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறது.      

            Food court வந்த நான் ஒரு காபியும், சோனம் Dhabi balla & Allo chatம் order செய்து சாப்பிட்டு க்ளாக் ரூமில் உடமைகளை வாங்கி வெளியே வந்து சேர மேலும் 1/2 மணி நேரமானது இந்த சம்மர் வெகேஷனின் முதல் எபிசோடான அக்‌ஷர்தாம் விசிட் நிறைவடைந்தது.


                                                                                                   ~தீரா தேடல் தொடரும்...,

No comments:

Post a Comment